Dec 23, 2025 - 06:22 PM -
0
இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர், இன்று (23) வடக்கு - கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்கள் மற்றும் மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்துக் கலந்துரையாடினார்.
இந்த சந்திப்புகள் கொழும்பில் இடம்பெற்றதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கர் தனது X தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.

