Mar 14, 2026 - 03:12 PM -
0
யாழ். மாவட்டத்திற்கு விஜயம் செய்த ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவினர் இன்று (14) ஆரியகுளம் நாக விகாரைக்கு சென்று வழிபாட்டில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் புத்திக பத்திரண, யாழ். மாவட்ட அமைப்பாளர் அருந்தவநாதன் அனோஜன் உள்ளிட்ட தொகுதி அமைப்பாளர்கள் விகாரையில் வழிபாட்டில் ஈடுபட்டதுடன் விகாராதிபதி மீகஹஜந்துரே சிறி விமல தேரருடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
ஐக்கிய மக்கள் சக்தியின் மறுசீரமைப்பு திட்டத்தின் கீழ் சிறப்பு பயிற்சி பட்டறையொன்று யாழ்ப்பாணத்தில் நேற்று (13) இடம்பெற்ற நிலையில் அதில் பங்கேற்பதற்காக ஐக்கிய மக்கள் சக்தியின் உயர்மட்ட குழுவினர் யாழ்ப்பாணம் வருகை தந்தனர்.
--
