Mar 16, 2026 - 11:55 AM -
0
கொழும்பு விவேகானந்தா கல்லூரியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, 1989 சாதாரண தரம் மற்றும் 1992 உயர்தரப் பழைய மாணவர்களால் முழுமையாக நவீனமயப்படுத்தப்பட்ட பாடசாலை நூலகம் அண்மையில் மாணவர் பயன்பாட்டிற்காகக் கையளிக்கப்பட்டது.
இம்மாணவர்களால் பாடசாலைக்கு 100 பகவத்கீதை நூல்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரியின் அதிபர் மூ. மூவேந்தன் பிரதம அதிதியாகவும், கல்லூரியின் முன்னாள் ஆசிரியரும், ஓய்வுபெற்ற உள்நாட்டு இறைவரித் திணைக்கள ஆணையாளரும், தற்போதைய வரி ஆலோசகருமான பாலசுந்தரம் சிவாஜி சிறப்பு அதிதியாகவும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
