Apr 17, 2026 - 02:30 PM -
0
நானுஓயா, டெஸ்போட், கீழ்ப்பிரிவு (B பிரிவு ) அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய வருடாந்த தேர்பவனி வெகு விமரிசையாக நேற்று (16) நடைபெற்றது.
கடந்த 13 ஆம் திகதி கணபதி வழபாட்டுடன் புண்ணியாகவாசம், கிராம சாந்தி, வாஸ்து சாந்தி என்பன நடைபெற்றது. தொடர்ந்து கடந்த 14 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி மாலையில் கரகம் பாலித்தல் இடம்பெற்றது.
கடந்த 15 ஆம் திகதி காலை புண்ணியாக வாசனம், விசேட பூஜை மற்றும் 108 சத ஸ்தோத்திர சங்காபிஷேகம் நடைபெற்று அதனைத் தொடர்ந்து பால்குடம் பரவைக்காவடி ஆலயத்தை வந்தடைந்தவுடன் நண்பகல் தீ மிதிப்பு நடைபெற்று மகேஸ்வர பூஜையுடன் அம்பிகை அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு மாலை வேட்டைத்திருவிழாவும் நடைபெற்றது.
நேற்று (16) வசந்த மண்டப பூஜையுடன் முறையே விநாயகர் பெருமான். வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் ஸ்ரீ கருமாரியம்மனுடன் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் வீதி உலா நடைபெற்றது .
இன்று (17) காலை வீதி உலா சென்ற தேர் ஆலயத்தை வந்தடைந்ததோடு, விசேட அபிசேக வழிபாடுகளும் பச்சை சாத்துதல் நடைபெறுகிறது மாலை மாவளக்கு பூஜையுடன் பூங்காவன திருவழா நடைபெறும்.
நாளை (18) தீர்த்த உற்சவமும் கரகம் வீதி உலா என்பன நடைபெற்று கொடி இரக்கத்துடன் விழா நிறைவுபெறும்.
அகில இலங்கை சபரி மலை ஸ்ரீதர்ம சாஸ்தா குரு பீடாதிபி ஊவா மாகாண பிரதம குரு சமாதான நீதவான் குரு சுவாமி பிரம்ம ஸ்ரீ தயாளன் குருக்கள் அவரின் நல்லாசியுடன் இளம்சுடர் நித்திய அலங்கார பூசனம் ஜோதிட நிபுணர் குரு சுவாமி பிரம்ம ஸ்ரீ த.சுதன் சர்மா தலைமையில் இப்பூஜைகள் வேத, ஆகம, சாஸ்திர முறைப்படி நடைபெற்றது.
--
