May 1, 2026 - 04:50 PM -
0
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மே தினப் பேரணி யாழ்ப்பாணம் முலவைச் சந்தியில் இன்று (01) பிற்பகல் 4 மணியளவில் ஆரம்பமானது.
இதில் கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், பாராளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரன், றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, எஸ். ஸ்ரீ பவானந்தராஜா மற்றும் கட்சியின் உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
முலவைச் சந்தியில் ஆரம்பமான குறித்த பேரணி யாழ். வைத்தியசாலை வீதியூடாக வேம்படிச் சந்தி, யாழ். மத்திய பேருந்து நிலையம், சத்திரத்துச் சந்தி ஊடாக கே.கே.எஸ் வீதி, பண்ணைச் சந்தியை அடைந்து அங்கிருந்தி யாழ் பிரதான வீதி யூடாக பயணித்த பேரணி யாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தை சென்றடைந்தது.
இதன்பின்னர் யாழ். நெடுந்தூர பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டிருந்த பிரதான மேடையில் கூட்டம் ஆரம்பமானது.
--
