May 17, 2026 - 09:53 PM -
0
மட்டக்களப்பு - கிழக்குப் பல்கலைக்கழக வளாகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இன்று (17) உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
வந்தாறுமூலை கிழக்குப் பல்கலைக்கழகத் தமிழ் மாணவர் ஒன்றியத்தினர் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் அமைப்பு ஆகியன இணைந்து இந்நிகழ்வை மிக ஏற்பாடு செய்திருந்தனர்.
இதன்போது, பொங்குதமிழ் நினைவுத்தூபியில் பிரதான ஈகைச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்திக்காக இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டதுடன், அங்கு குழுமியிருந்தவர்கள் நினைவுத்தூபிக்குச் சுடரேற்றி, மலரஞ்சலி செலுத்தினர்.
இதனைத் தொடர்ந்து, அனைவருக்கும் முள்ளிவாய்க்கால் கஞ்சி பகிர்ந்தளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் பல்கலைக்கழக மாணவர்கள், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
--
