May 20, 2026 - 04:57 PM -
0
வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழாவை முன்னிட்டு குடியேற்றத்திற்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்தில் இருந்து இன்று (20) மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவ பெருவிழா நாளை (21) இடம்பெற உள்ள நிலையில் கொடிச்சீலை இன்று சம்பிரதாய பூர்வமாக எடுத்து வரப்பட்டது.
திருக்கேதீஸ்வர ஆலயத்திற்கு கொண்டு வரப்பட்ட குறித்த கொடிச்சீலை சம்பிரதாய பூர்வமாக கொடிச் சீலை வழங்குகின்றவர்களினால் திருக்கேதீஸ்வர ஆலய பிரதம குரு மற்றும் ஆலய நிர்வாகத்தினரிடம் சம்பிரதாய பூர்வமாக கையளிக்கப்பட்டது.
--
