Jun 14, 2026 - 11:31 AM -
0
இலங்கையில் அதிகளவாக பக்தர்கள் தீமிதிப்பு உற்சவத்தில் கலந்துகொள்ளும் ஆலயம் என்ற பெருமையினைக்கொண்ட கிழக்கிலங்கையின் வரலாற்று சிறப்புமிக்க மட்டக்களப்பு புன்னைச்சோலை அருள்மிகு பத்திரகாளியம்மன் ஆலயத்தின் தீமிதிப்பு உற்சவம் பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ வெகுவிமர்சையாக நடைபெற்றது.
மட்டக்களப்பு மத்திய பிரதேசத்தில் பன்னெடுங்காலமாக அருளாட்சி செய்துவரும் அன்னை பத்திரகாளியம்மன் ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை திருக்கதவு திறத்தலுடன் ஆரம்பமானது.
ஆலயத்தின் வருடாந்த திருச்சடங்கு அன்னையின் கலியாணக்கால் வெட்டும் நிகழ்வு நடைபெற்றதுடன் ஊர்வீதியுலாவும் நடைபெற்றது.
இந்த ஆலயத்தின் வருடாந்த தீமிதிப்பு ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெற்று அம்பாள் மஞ்சள்குளிப்பு நிகழ்வு நடைபெற்றது.
அதனைத்தொடர்ந்து அம்பாள் ஆலயம் வருகைதந்தவுடன் தீக்குளிக்கு விசேட பூஜைகள் நடைபெற்று தெய்வாதிகள் சூழ பல்லாயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ பக்தர்களின் ஆரோகரா கோசங்களுடன் தீமிதிப்பு உற்சவம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த தீமிதிப்பு உற்சவத்தில் ஐந்தாயிரத்திற்கும் அதிகமான அடியார்கள் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
--
