Header Logo
Mogo Academy

ஏனையவை
மாமாவை கொலை செய்த மருமகன்!

Dec 31, 2024 - 04:20 PM -

0

மாமாவை கொலை செய்த மருமகன்!
Mobitel inner

மதுரங்குளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடையாமோட்டை கிலவமடுச்சேனை பிரதேசத்தில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று (30) கூரிய அயுதத்தினால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 

மைத்துனர்கள் இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றி, அது பெரும் கைகலப்பாக மாறியதுடன், அதனை சமரசத்திற்கு கொண்டு வர முயற்சி செய்த மாமாவே, மருமகனின் கத்திக் குத்துக்கு இலக்காகி உயிழந்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

 

மதுரங்குளி - கிலவமடுச்சேனைப் பிரதேசத்தைச் சேர்ந்த தொம்பகஹ பத்திரனகே டைட்டஸ் ரோஹன் பீரிஸ் ( வயது 56) எனும் நான்கு பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

சம்பவம் இடம்பெற்ற போது, தனது சிறிய மகனின் வீட்டுக்கு மதுபோதையில் சென்ற மைத்தனர், அங்கு கடும் வாய்தர்க்கத்திலும் , மோதிலிலும் ஈடுபட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்படுகிறது.

 

இதன்போது, தனது மகனுக்கும், மருமகனுக்கும் இடையே இடம்பெற்றுவந்த சண்டையை பிரிக்கமுற்பட்ட போது, மருமகன் மறைத்து வைத்திருந்த  கூரிய ஆயுதத்தினால் தனது மகனை குத்திக் காயப்படுத்த முயற்சி செய்துள்ளார் எனவும், அதனை தடுக்க முற்பட்ட மாமா மீது மருமகன் கூரிய ஆயுதத்தினால் குத்திக் காயப்படுத்தியுள்ளார் என்றும் முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

 

இதன்போது, படுகாயமடைந்த மாமாவை அங்கிருந்தவர்கள் உடனடியாக புத்தளம் ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு சென்று அனுமதித்த போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டார் என வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

 

கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபரான மருமகன் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

உயிரிழந்த நபரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக புத்தளம் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

இந்த கொலை சம்பவம் தொடர்பில் மதுரங்குளி பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara