Header Logo
Mogo Academy

ஏனையவை
1,289 கிலோ பீடி இலைகள் மீட்பு

Jan 22, 2025 - 08:12 AM -

0

1,289 கிலோ பீடி இலைகள் மீட்பு
Mobitel inner

கற்பிட்டி - உச்சமுனை மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற்பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது 1,289 கிலோ பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

வடமேல் கடற்படை கட்டளையின் விஜய நிறுவனத்தின் உச்சமுனை கடற்படையினர் கற்பிட்டி மற்றும் கீரிமுந்தல் ஆகிய கடற் பிரதேசத்தில் கடந்த 20 ஆம் திகதி இரவு விஷேட ரோந்து நடவடிக்கையினை மேற்கொண்டனர்.

 

இதன்போது, உச்சமுனை கடற்பிரதேசத்தில் சந்தேகத்திற்கு இடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இயந்திர படகினை பரிசோதனை செய்தனர்.

 

இதன்போது குறித்த படகில் 21 உரமூடைகளில் 654 கிலோ கிராம் பீடி இலைகள் இருந்துள்ளமை தெரியவந்துள்ளது.

 

மேலும், குறித்த பீடி இலைகள் அடங்கிய உரமூடைகளை கடற்பிரதேசத்தில் இருந்து வேறு இடமொன்று எடுத்துச் செல்வதற்காக தயார் நிலையில் இருந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு உழவு இயந்திரத்தினையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர்.

 

இதனையடுத்து, குறித்த பீடி இலைகள் உழவு இயந்திரம் மற்றும் இயந்திர படகு என்பனவற்றை தமது பொறுப்பில் எடுத்த கடறபடையினர், அந்த படகில் பயணித்த ஒருவரையும் சந்தேகத்தின் பெயரில் கைது செய்துள்ளனர்.

 

இதேவேளை, விஜய நிறுவன கடற்படையினர் கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட விஷேட தேடுதல் நடவடிக்கையின் போது, 18 உரமூடைகளில் அடைக்ப்பட்ட நிலையில் 635 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

 

இதன்போது, குறித்த பீடி இலைகளை கொண்டு செல்வதற்கு பயன்படுத்தப்பட்ட வல்லம் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகத்தின் பெயரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும் 33, 43 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் கற்பிட்டி மற்றும் மண்டலக்குடா ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் குறிப்பிட்டனர்.

 

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் இருவரும், பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் டிங்கி இயந்திர படகு, வல்லம், இரண்டு உழவு இயந்திரம் என்பன மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாகவும் கடற்படையினர் மேலும் தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

விரைவில் காணிகளை வழங்க அவதானம்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

சஜித்திற்கு சவால் விடுத்த பிரதீப்!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

மக்களின் போராட்டம் முற்றிலும் நியாயமானது!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

6 ஆவது வாரமாகத் தொடரும் போராட்டம்!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

லிந்துலை புனித ஜோன் தேவாலயத்தின் 150 ஆவது ஆண்டு விழா!

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

பதவி விலகும் கலாசாரம் இல்லை - ப.சத்தியலிங்கம்

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

மழை அங்கியுடன் சிறுவனின் எலும்புக்கூடு மீட்பு!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

யாழ். நூலகத்தை ஏரித்தவர்கள் ஐக்கிய தேசிய கட்சியாகும்!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

நீதி வழங்கப்பட்டதாக சரித்திரமும் இல்லை, வழங்குவதற்கான அறிகுறியும் இல்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

முஸ்லிம் மக்கள் ஜனாதிபதி மீது நம்பிக்கையை இழக்கவில்லை!

Mobitel Upahara