Header Logo

மலையகம்
பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த விபரீதம்

Apr 27, 2025 - 11:50 AM -

0

பொன்னர் சங்கர் நாடகத்தில் நேர்ந்த விபரீதம்

நானுஓயா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நானுஓயா கிளாசோ தோட்டத்தில் தமிழர் வரலாற்றை கூறும் பொன்னர் சங்கர் நாடகத்தில் இன்று (27) அதிகாலை 60 அடி உயரம் கொண்ட கம்ப மரத்தில் ஏறும் போது தவறி விழுந்தவர் உயிரிழந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவர் நானுஓயா கிளாசோ தோட்டத்தைச் சேர்ந்த முருகன் சதாசிவம் (வயது 63) என்பவர் எனவும் இவர் பொன்னர் சங்கர் கூத்து நாடகத்தில் பெரிய அண்ணன் என்ற கதாபாத்திரத்தில் வேடமிட்டவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இவ்வாறு உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

 

குறித்த பொன்னர் சங்கர் வரலாற்று நாடக நிகழ்ச்சி நேற்று (26) இரவு ஆரம்பிக்கப்பட்டு இன்று காலை வரை இடம்பெற இருந்த நிலையில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

 

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை நானுஓயா பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

பொருளாதாரத்தை சீர்செய்வது மட்டும் தீர்வாகாது

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

தையிட்டி காணி அளவீட்டு நடவடிக்கை இரத்து!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

நுவரெலியா பம்பரக்கலை நெடுங்குடியிருப்பில் தீப்பரவல்!

title