Header Logo

மலையகம்
நுவரெலியாவில் அனைத்து சபைகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி கைப்பற்றும்

Apr 29, 2025 - 05:00 PM -

0

நுவரெலியாவில் அனைத்து சபைகளையும் தமிழ் முற்போக்கு கூட்டணி கைப்பற்றும்

ஸ்தாபக தலைவர் வீ.கே.வெள்ளையனின் ஆசிர்வாதத்தோடும் தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவரும் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரத்தின் ஆளுமையோடு இம்முறே நுவரெலியா மாவடாடத்தில் அனைத்து உள்ளூராட்சி சபைகளிலும் ஆட்சியினை அமைப்போம் என தொழிலாளர் தேசிய சங்கத்தின் பிரதி பொதுச்செயலாளர் பழனிவேல் கல்யான குமார் தெரிவித்துள்ளார். 

இன்று (29) பொகவந்தலாவ வட்டாரத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டமொன்றில் கலந்து கொண்டு மக்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

இதன் போது மக்கள் மத்தியில் பேசிய பிரதி பொதுச்செயலாளர் தேர்தல் காலம் என்பதால் பல்வேறு கட்சிகளை சார்ந்த வேட்பாளர்கள் பொய்யான வாக்குறுதிகளை கூறி மக்களை திசை திருப்ப முயற்சிக்கின்றனர். 

ஆனால் எமது மலையக மக்களுக்கு தெரியும் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் யார் உணர்வு பூர்வமாக சேவை செய்தவர் எமது தலைவர் பழனி திகாம்பரம் என்பதனை மக்களால் மறக்கவும் முடியாது மறுக்கவும் முடியாது. 

மலையகத்திற்கு வீடமைப்பு திட்டம் முதல் கார்பட் வீதி, மலையகத்திற்கான அதிகார சபைகள் அனைத்தையும் கொண்டு வந்தது தமிழ் முற்போக்கு கூட்டணி என்பதனை ஏனைய கட்சிகள் பாராளுமன்றத்தில் கூட ஏற்றுக்கொண்டுயிருக்கிறது. 

இம்முறை இடம்பெறவிருக்கின்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து சபைகளையும் நாம் கைபற்றி அபிவிருத்தி பணிகளை முன்னெடுபோம் என குறிப்பிட்டார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!