May 7, 2025 - 03:24 PM -
0
நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்ற தேர்தலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது நம்பிக்கை கொண்டு, வாக்களித்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள் என இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தனித்து ஆட்சி அமைக்க கூடிய சபைகளில் தனித்தும், கூட்டணியாக ஆட்சி அமைக்க கூடிய சபைகளில் கூட்டிணிணைந்து காலத்திற்கு ஏற்ற வகையில் ஆட்சி அமைத்து, இ.தொ.கா மக்கள் பணியை தொடர்ந்தும் முன்னெடுக்கும் என செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் இ.தொ.காவின் வெற்றிக்கு அயராது உழைத்த தொண்டர்கள், பொறுப்பாளர்கள், சமூக ஆர்வலர்கள், நலன்விரும்பிகள்,அரச உத்தியோகஸ்தர்கள் மற்றும் ஊடக நண்பர்கள் அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்துள்ளார்.