May 12, 2025 - 03:35 PM -
0
ஹட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தின் சித்திரா பௌர்ணமி தேர்த்திருவிழாவினை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்த அடியார்கள் பங்கேற்ற சித்திரா பௌர்ணமி பால்குட பவனி இன்று (12) மிக சிறப்பாக நடைபெற்றது.
பால்குட பவனியினை முன்னிட்டு விநாயகர் வழிபாடு சங்காபிஷேகம் அக்கினி பூஜை ஆகியன இடம்பெற்று பால்குட பவனி ஹட்டன் வில்பர்ட் டவுன் அம்மன் ஆலயத்தில் ஆரம்பமாகி ஹட்டன் பிரதான வீதியூடாக ஆலயத்தினை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து மாணிக்க பிள்ளையாருக்கு மேளதாள வாத்தியங்கள் இசை முழங்க பாலாபிஷேகம் நடைபெற்றது.
--