May 14, 2025 - 01:03 PM -
0
இலங்கை தேயிலைத் தொழிற்துறைக்கு பங்களிப்பு வழங்கிவரும் அனைத்துப் பங்குதாரர்களின் பங்குப்பற்றலுடன் 8 ஆவது தேசிய தேயிலை நிகழ்வுகள் நேற்று (13) பெருந்தோட்ட சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தலைமையில் இறக்குவானை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் இடம்பெற்றிருந்தது.
சுமார் 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்று சிறப்பு வாய்ந்த இலங்கைத் தேயிலைத் தொழிற்துறையின் கலாசார நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் குறித்த விழா, சித்திரை மாதம் வரை உற்பத்தி செய்யப்படும், தேயிலையை முதன் முதலாக இறைவனுக்காக படைக்கப்பட்டு, பூஜை வழிபாடுகளை மேற்கொண்டு வருகின்ற ஒரு தேசிய விழாவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
--