May 14, 2025 - 04:20 PM -
0
நுவரெலியாவில் கடந்த (10) ஆம் திகதி முதல் எதிர்வரும் (16) திகதி வரை தேசிய வெசாக் வாரமாக அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் ஏராளமான வெசாக் மின் தோரணங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேலும் பௌத்த கொடிகள் பறக்கவிடப்பட்டுள்ளதுடன் வெசாக் கூடுகளும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன.
சில இடங்களில் வெசாக் வலயம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன பெரும் எண்ணிக்கையான மக்கள் வெசாக் பந்தல்களை பார்வையிட்டு வருகின்றனர்.
வழக்கம் போல் வெசாக் கொண்டாட்டத்திற்காக நாட்டின் பகுதிகளில் இருந்தும் நுவரெலியாவிற்கு இலட்சக்கணக்கான மக்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அத்துடன் நகர் முழுவதும் பல்வேறு அமைப்புக்களினாலும் பிரதேச மக்களினாலும் தானசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.
--