Header Logo

செய்திகள்
தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

May 15, 2025 - 02:36 PM -

0

தூதுவர்கள் ஏழு பேர் நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்!

இலங்கைக்கு புதிதாக நியமனம் பெற்றுவந்த தூதுவர்கள் 7 பேர் இன்று (15) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் உத்தியோகபூர்வமாக தங்களது நற்சான்று பத்திரங்களை கையளித்தனர்.

 

ஆஜன்டீனா குடியரசு (Argentine Republic) சிம்பாப்வே குடியரசு (Republic of Zimbabwe), இஸ்ரேல் (Israel), பிலிபைன்ஸ் குடியரசு (Republic of the Philippines), டஜிகிஸ்தான் குடியரசு (Republic of Tajikistan), கம்போடியா இராச்சியம் (Kingdom of Cambodia) மற்றும் டென்மார்க் ராச்சியம் (Kingdom of Denmark) ஆகிய நாடுகளின் புதிய தூதுவர்களே இவ்வாறு நியமனம் பெற்றுள்ளனர்.

 

இன்று நற்சான்று பத்திரங்களை கையளித்த தூதுவர்களின் பெயர் விபரம் வருமாறு,

 

01.Mr. Mariano Agustin Caucino மாரியானோ அகுஸ்டின் கவ்சினோ - புதுடில்லியிலுள்ள ஆஜன்டீனா குடியரசின் தூதரகம்

 

02.Ms. Stella Nkomo ஸ்டெல்லா ந்கொமோ -  புதுடில்லியில் உள்ள சிம்பாப்பே தூதரகம்

 

03. Mr. Reuven Javier Azar ரூவென் ஹவீயர் அசார் - புதுடில்லி இஸ்ரேல் தூதரகம்

 

04.Ms. Nina P. Cainglet  நினா பி. கயிங்லெட் - டகாவிலுள்ள பிலிபைன்ஸ் துதரகம்

 

05.Mr. Lukmon Bobokalonzoda லுக்மொன் போபோகலொன்சோடா - புது டில்லியிலிருக்கும் டஜிகிஸ்தான் குடியரசு தூதரகம்

 

06.Ms. Rath Many ரத் மெனி - புதுடில்லியில் உள்ள கம்போடியா இராச்சியத்தின் தூதரகம்

 

07.Mr. Rasmus Kristensen ரஸ்மஸ் கிறிஸ்டென்சன் - புதுடில்லியிலுள்ள டென்மார்க் இராச்சியத்தின் தூதரகம்

 

வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க உள்ளிட்டவர்கள் இதில் கலந்துகொண்டனர்.

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title