Header Logo

மலையகம்
சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் சத்தியப்பிரமான நிகழ்வு

Jun 16, 2025 - 11:27 AM -

0

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் சத்தியப்பிரமான நிகழ்வு

சந்திரசேகரன் மக்கள் முன்னணி சார்பாக நுவரெலியா மாவட்டத்தின் உள்ளூராட்சி மன்றங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் சத்தியப்பிரமான நிகழ்வு நேற்று (15) தலவாக்கலையில் அமைந்துள்ள சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் தலைமை காரியாலயத்தில் இடம்பெற்றது.

 

சந்திரசேகரன் மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

 

கொட்டகலை பிரதேச சபைக்காக சிவசாமி பத்மநாதன், அகரபத்தனை பிரதேச சபைக்காக பாலகிருஷ்ணன் பிரதீப், நுவரெலியா பிரதேச சபைக்காக கனகசுந்தரம் லலித்குமார், நோர்வூட் பிரதேச சபைக்காக ஆறுமுகம் தியாகராஜா ஆகியோர் முன்னணியின் பொதுசெயலாளர் அனுஷா சந்திரசேகரன் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்திருந்தனர்.

 

சத்தியப்பிரமாண நிகழ்வின் பின்னர் எமது மலையக மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கும், பிரதேச சபைகள் ஊடாக எமது மக்களுக்கு பெற்றுக்கொடுக்கக்கூடிய சேவைகளை தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

 

எதிர்காலத்தில் எமது மலையக மக்களின் நலனை கருத்திற்கொண்டு மாத்திரம் உறுப்பினர்களின்  செயற்பாடுகள் தீர்மானங்கள் அமைய வேண்டும் எனவும் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது.

 

இறுதியாக இடம்பெற்ற உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சந்திரசேகரன் மக்கள் முன்னணியை பிரதிநிதித்துவப்படுத்தி அனுஷா சந்திரசேகரனின் வழிகாட்டலில் நுவரெலியா மாவட்டத்தின் நான்கு சபைகளில் ஜனநாயக தேசிய கூட்டணியின் தபால்பெட்டி சின்னத்தில் போட்டியிட்டு ஒவ்வொரு சபையிலும் தலா ஒருவர் வீதம் தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!