Header Logo

உலகம்
பாகிஸ்தானில் பஸ் மீது துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

Jul 16, 2025 - 10:35 PM -

0

பாகிஸ்தானில் பஸ் மீது துப்பாக்கி சூடு : 3 பேர் பலி

பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணத்தில் பயணிகள் பஸ் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதில் 3 பேர் கொல்லப்பட்டனர். 7 பேர் காயமடைந்தனர். அந்த பஸ், கராச்சியில் இருந்து குவெட்டா நோக்கி சென்று கொண்டிருந்தபோது, பதற்றம் நிறைந்த கலாத் பகுதியில் தாக்குதல் நடத்தப்பட்டது. 

இதனை தொடர்ந்து, நிலைமையை சரிசெய்ய பாதுகாப்பு முகமைகள், மாவட்ட நிர்வாகம் மற்றும் மீட்பு குழுக்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன. பாதுகாப்பு படையினர் குறித்த பகுதியை சுற்றிவளைத்து தேடுதல் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இது ஒரு கோழைத்தன தாக்குதல் என்று உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி கண்டனம் தெரிவித்துள்ளார். 

ஒரு வாரத்திற்கு முன்னர், பஞ்சாப் நோக்கி சென்ற ரெயிலின் 2 பெட்டிகளில் பயணித்த 9 பேரை பலூசிஸ்தானின் ஜோப் பகுதியில் கிளர்ச்சியாளர்கள் கீழே இறக்கி விட்டு, சுட்டு கொன்றனர். 

இந்த நிலையில், இந்த கொடூர தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதலுக்கு எந்த குழுவும் உடனடியாக பொறுப்பேற்கவில்லை. பலூசிஸ்தான் மாகாணத்தில் கிளர்ச்சியாளர் குழுக்களால் பயணிகள் பஸ்கள் தாக்கப்படும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

இந்த நோய் அறிகுறிகள் இருந்தால் மருத்துவ ஆலோசனை பெற வேண்டும்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் மழை மற்றும் அடர்ந்த பனிமூட்டம்!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

மண்டூர் - வெல்லாவெளி போக்குவரத்து முற்றாகத் துண்டிப்பு!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

100 நாட்களுக்குப் பிறகு மீண்டும் யாழ்ப்பாணம் வந்தடைந்தது!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

விஜய்க்கு கேக் வெட்டி கொழும்பில் கொண்டாட்டம்!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

பவானி வீதி தொடர்பான நீதிமன்றக் கட்டளை 21 ஆம் திகதி!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

சி.சிறீதரன் எம்.பி கோரிக்கை!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

அரசு முறையான விசாரணை நடத்தி மக்களுக்கு உண்மையை வெளிப்படுத்த வேண்டும்!

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

சிங்களமயமாக்கப்படுவதற்கு சாணக்கியன் துணை போகிறாரா?

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

செம்மணியின் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளின் 11 ஆவது நாள்!

title