Header Logo

உலகம்
சீனாவில் தொங்குப்பாலம் அறுந்து விபத்து : 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

Aug 7, 2025 - 07:50 PM -

0

சீனாவில் தொங்குப்பாலம் அறுந்து விபத்து : 5 சுற்றுலாப் பயணிகள் உயிரிழப்பு

சீனாவின் சின்ஜியாங் மாகாணம், யிலி பகுதியில் உள்ள சியாட்டா சுற்றுலா மையத்தில் நேற்று (06) மாலை ஏற்பட்ட கயிறு தொங்குப்பால விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

பாலத்தின் ஒரு கயிறு அறுந்து பாலம் ஒரு பக்கமாக சாய்ந்ததால், 29 சுற்றுலாப் பயணிகள் நீரற்ற, பாறைகள் நிறைந்த ஆற்றுக்குள் விழுந்தனர். 

இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்தன நிலையில், 24 பேர் படுகாயமடைந்தனர்.இந்த சம்பவம் உச்ச சுற்றுலா காலத்தில் நிகழ்ந்ததால், பாலத்தில் அதிக எண்ணிக்கையிலான பயணிகள் இருந்ததாகக் கருதப்படுகிறது. 

மோசமான பராமரிப்பு மற்றும் பயணிகளின் எண்ணிக்கையை கட்டுப்படுத்தாதது விபத்துக்கு முக்கிய காரணங்களாக இருக்கலாம் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

சமூக ஊடகங்களில் பரவிய காணொளிகளில், பாலம் சாய்ந்து மக்கள் ஆற்றுக்குள் விழும் பதைபதைப்பூட்டும் காட்சிகள் பதிவாகியுள்ளன. 

விபத்தைத் தொடர்ந்து, சியாட்டா சுற்றுலா மையம் தற்காலிகமாக மூடப்பட்டு, உள்ளூர் அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக வைத்திய உதவி வழங்கப்பட்டு வருகிறது. பாலத்தின் பாதுகாப்பு அம்சங்கள் மறு ஆய்வு செய்யப்பட உள்ளன.

Comments
0

MOST READ

காணொளி
டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

பாக் நீரிணையை நீந்திக் கடந்த ஆட்டிசம் பாதித்த சிறுவர்கள்!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

இந்திய வம்சாவளி இலங்கை தமிழர்களுக்கும் OCI பெற வாய்ப்பு!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

தமிழ் மக்கள் ஒன்றுபடுவதை சிலர் திட்டமிட்டு தடுக்கின்றனர்!

title