விளையாட்டு
சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கோலி, ரோகித் அடுத்த மாதம் ஓய்வு?

Aug 10, 2025 - 03:36 PM -

0

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து கோலி, ரோகித் அடுத்த மாதம் ஓய்வு?

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரர்களான ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி இருவரும் கடந்த இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரை வென்ற பின்னர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர். 

இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக இருவரும் அறிவித்தனர். 

இந்த முடிவு அவர்களது ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகத்திற்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. 

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அவர்களை தெரிவு செய்ய இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபையின் தெரிவுக்கு விரும்பவில்லை என தகவல்கள் வெளியான நிலையில் அவர்கள் தமது ஓய்வு குறித்த அறிவிப்பை வௌியிட்டிருந்தனர். 

இதனையடுத்து ஒருநாள் போட்டிகளில் மட்டுமே தொடர்ந்து விளையாட உள்ள அவர்கள் அடுத்த உலக கிண்ணம் (2027) வரை விளையாடுவதை இலக்காக கொண்டுள்ளனர். 

இருப்பினும் அவர்களால் ஒருநாள் உலக கிண்ணம் வரை தொடர்ந்து தகுதியுடன் இருக்க முடியுமா? என்பது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உலக கிண்ண தொடருக்கு முன்னதாக இந்திய அணி சுமார் 27 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாட உள்ளது. 

அந்த போட்டிகளில் இருவரும் தொடர்ந்தும் சிறப்பான ஆட்டத்தை வௌிப்படுத்தினால் மட்டுமே உலக கிண்ணம் வரை இந்திய அணியில் இடம்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா 2027 ஒருநாள் உலக கிண்ண தொடருக்கான பி.சி.சி.ஐ. இன் திட்டத்தில் இல்லை என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

இதன் காரணமாக இருவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை விரைவில் முடிவடைய உள்ளதாக கூறப்படுகிறது. 

இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடவுள்ளது. 

அந்த ஒருநாள் தொடரே கோலி மற்றும் ரோகித் சர்மாவின் கடைசி சர்வதேச தொடராக அமையலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இருப்பினும், விராட் கோலி மற்றும் ரோகித் இருவரும் ஒருநாள் உலக கிண்ணத் தொடரில் இடம் பெற வேண்டுமானால், இந்த ஆண்டு டிசம்பரில் ஆரம்பமாகவுள்ள உள்நாட்டு ஒருநாள் போட்டியான விஜய் ஹசாரே தொடரில் பங்கேற்க வேண்டும் என பி.சி.சி.ஐ. நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது. 

இந்த தொடரில் விளையாடாமல் உலக கிண்ணத் தொடரில் குறித்த இருவரும் பங்கேற்பதற்கு வாய்ப்பில்லை என தெரிவிக்கப்படுகின்றது. 

எனவே கோலி மற்றும் ரோகித் அடுத்த மாதத்திற்குள் தங்களது ஓய்வு குறித்த அறிவிப்பை வௌியிடக்கூடும் என கிரிக்கெட் ஆய்வாளர்கள் எதிர்வுக்கூறியுள்ளனர்.

Comments
0

MOST READ
01
02
03
04
05