Header Logo

கிழக்கு
மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

Sep 5, 2025 - 11:09 AM -

0

மனிதகுலத்திற்கு ஒளியூட்டிய நபிகளாரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவோம்

எமது இறைத் தூதரான நபிகள் நாயகம் முஹம்மது (ஸல்) பிறந்த நாளான மீலாதுன் நபி தினத்தில், உலகெங்கும் வாழும் முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும், குறிப்பாக இலங்கையிலுள்ள எம் அன்பு மக்களுக்கும் எனது இதயம் கனிந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். 

நபிகள் நாயகம் (ஸல்) வாழ்ந்த வரலாறு, மனிதகுலத்திற்கு வழிகாட்டும் ஒரு சிறந்த முன்மாதிரியாகும். அவர் வாழ்வின் ஒவ்வொரு தருணமும் அன்பு, நம்பிக்கை, சகிப்புத் தன்மை, நீதி மற்றும் சமூக ஒற்றுமை ஆகிய பண்புகளால் நிரம்பியிருந்தது. சமுதாயத்தில் வறியவர்களுக்கு அக்கறை காட்டுதல், அநீதியால் வாடுவோருக்காக குரல் கொடுப்பது, அன்பும் நட்பும் நிறைந்த வாழ்க்கையை வாழ்ந்து காட்டியது தான் நபிகளாரின் மகத்தான வழிகாட்டுதலாகும். 

இன்றைய உலகம் பல்வேறு சவால்களையும் சிக்கல்களையும் எதிர்கொள்ளும் நேரத்தில், நபிகளாரின் நட்பண்புகளை மீண்டும் நினைவுகூர்ந்து செயல்படுதல் என்பது மிகுந்த அவசியமாகிறது. மதம், இன வேறுபாடுகளை தாண்டி அனைவரும் ஒன்றுபட்டு சமூக ஒற்றுமை, சகோதரத்துவம், சமாதானம் ஆகியவற்றை நிலைநிறுத்த வேண்டும். 

இந்த புனித நாளில், உலகம் முழுவதும் அமைதியும் நிம்மதியும் நிலைநிறுத்தப்பட வேண்டும் என்று பிரார்த்திக்கிறேன். குறிப்பாக, பல துயரங்களையும் அநீதிகளையும் எதிர்கொண்டு வரும் பலஸ்தீன் மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டு, அவர்கள் வாழ்வில் நீதி, சுதந்திரம் மற்றும் அமைதி நிலவவேண்டும் என அல்லாஹ்விடம் பிராத்திப்போம்.

Comments
0

MOST READ

காணொளி
குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

சர்வதேச நீதி கோரி முல்லைத்தீவில் மாபெரும் போராட்டம்!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

இலங்கை ஆசிரியர் சங்கம் நீதிமன்றை நாடவுள்ளது!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

சூட்சுமமான முறையில் விற்பனை நிலையத்தில் திருட்டு!

title