Header Logo

பல்சுவை
மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!

Sep 15, 2025 - 01:14 PM -

0

மகளை பாலியல் பலாத்காரம் செய்த தந்தை!

இந்தியாவின் பொள்ளாச்சி அருகே 15 வயது சிறுமி கர்ப்பமான சம்பவத்தில், வளர்ப்பு தந்தை மற்றும் காதலன் கைது செய்யப்பட்டுள்ளனர். பாடசாலை மாணவியை இருவரும் பாலியல் பலாத்காரம் செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது. 

 

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள ஒரு கிராமத்தில் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த (58) வயதான கூலி தொழிலாளி. பெண் குழந்தையுடன் இருந்த பெண் ஒருவரை திருமணம் செய்து வாடகை வீட்டில் வாழ்ந்து வந்தனர். இவரது 15 வயது வளர்ப்பு மகள் அப்பகுதியில் உள்ள அரசு பாடசாலையில் 11 ஆம் வகுப்பு படித்து வந்துள்ளார். 

இந்நிலையில் மாணவி அடிக்கடி வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த தாய் பொள்ளாச்சி அரச வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்தியர்கள் சிறுமியை பரிசோதனை செய்த போது அவர் ஆறு மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனை சற்று எதிர்பாராத தாய் அதிர்ச்சி அடைந்தார். 

இதுகுறித்து சிறுமியின் தாய் பொள்ளாச்சி அனைத்து மகளிர் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரை அடுத்து பொலிஸார் மாணவியிடம் விசாரணை நடத்திய போது பல்வேறு அதிர்ச்சி தகவல் வெளியானது. 

அதாவது பாடசாலை செல்வதற்காக பேருந்து நிலையத்தில் நின்ற போது அப்பகுதியில் உள்ள டீக்கடையில் பணியாற்றிய கவியரசன் (21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே காதலாக மாறியுள்ளது. 

திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி மாணவியை பல்வேறு இடங்களுக்கு கவியரசன் அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். 

இந்த விவகாரம் வளர்ப்பு தந்தைக்கு தெரிய வந்ததை அடுத்து அவரும் மாணவியை மிரட்டி, மகள் என்றும் பாராமல் பாலியல் பலாத்காரம் செய்துள்ளது தெரியவந்தது. இதையடுத்து பொலிஸார் மாணவியின் தந்தை மற்றும் காதலன் கவியரசன் இருவர் மீதும் போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.

Comments
0

MOST READ

காணொளி
காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

காங்கேசன்துறையில் வேலைவாய்ப்புக்களை வழங்க முடியும்

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

நீதிமன்றில் முன்னிலையான அர்ச்சுனா!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

பலாலியில் காணி உரிமையாளர்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

title