வடக்கு
அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த இளம் தலைவர்கள்

Nov 2, 2025 - 11:23 AM -

0

அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்த இளம் தலைவர்கள்

இலங்கை தமிழரசு கட்சியின் அழைப்பின் பேரில் தென்னிலங்கையைச் சேர்ந்த அரசியல் கட்சிகளின் இளம் தலைவர்கள் நேற்று (01) யாழ்ப்பாணத்துக்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டனர். 

14 அரசியல் கட்சிகளைபிரதிநிதித்துவப்படுத்தும் 24 பேர் கொண்ட இளம் அரசியல் தலைவர்கள் குழு இந்தியாவிற்கு விஜயம் செய்ததன் தொடர்ச்சியாக வடக்கு மாகாண விஜயம் அமைந்துள்ளது. 

இவ் விஜயத்தின் போது வடக்கு மாகண மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பில் கள விஜயங்கள் மேற்கொள்ளும் நோக்கத்துடன் வருகைதந்த குறித்த குழுவினர் நேற்று யாழ்ப்பாணத்திலிருந்து காங்கேசன்துறை வரை புகையிரதத்தில் பயணித்து காங்கேசன்துறை துறைமுகம், மயிலிட்டி மீன்பிடித்துறைமுகம் மற்றும் பலாலி விமான நிலையம் ஆகியவற்றுக்குச் சென்று அங்குள்ள அபிவிருத்தி நிலைமைகள் தொடர்பாக ஆராய்ந்தனர். 

வடக்கின் பொருளாதார நிலைமைகள் தொடர்பாக ஆராயும் முகமாக குறித்த விஜயம் இடம்பெற்றுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05