Apr 16, 2026 - 07:58 PM -
0
தெதுறு ஓயாவில் நீராடச் சென்ற 15 பேரில் 10 பேர் இன்று (16) மாலை நீரில் மூழ்கி விபத்துக்குள்ளாகியுள்ளனர்.
நீரில் மூழ்கியவர்களில் இருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், மேலும் இருவரது சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நீரில் மூழ்கியவர்களில் 6 பேர் இன்னமும் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நிக்கவரட்டிய, குரட்டியகஹமுல பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
