Dec 4, 2025 - 01:49 PM -
0
டித்வா புயல் காரணமாக பாரியளவில் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு, சாகர்பந்து நடவடிக்கை மூலம் இந்தியா தொடர்ச்சியான ஆதரவை வழங்கி வருகின்றது.
அதற்கமைய, மேலும் நிவாரண உதவிகளுடன் C17 விமானம் நேற்று (3) இரவு இலங்கையை வந்தடைந்தது.
குறித்த விமானத்தின் ஊடாக பெய்லி பாலம் ஒன்றும் 500 நீர் சுத்திகரிப்பு சாதனங்களும் விநியோகிக்கப்பட்டுள்ளன.
டித்வா புயலினால் போக்குவரத்து முற்றாக துண்டிக்கப்பட்டிருக்கும் பகுதிகளுக்கு இடையிலான வீதி இணைப்புகளை மீளமைக்க இந்த பாலம் உதவும் என குறிப்பிடப்படுகின்றது.

