Header Logo

மலையகம்
கதறிய அழுத மக்களை வாரி அரவனைத்த பிரதி அமைச்சர்!

Dec 5, 2025 - 11:31 AM -

0

கதறிய அழுத மக்களை வாரி அரவனைத்த பிரதி அமைச்சர்!

சீரற்ற வானிலையால் மலையகத்தில் பாதிக்கப்பட்ட நுவரெலியா, கந்தப்பளை பகுதியில் உள்ள மக்களை பார்வையிடுவதற்காக நேற்று (04) பெருந்தோட்ட மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அங்கு சென்றிருந்தார். 

கந்தப்பளை பகுதியில் மண்சரிவு மற்றும் வெள்ள அனர்த்தினால் பாதிக்கப்பட்ட மக்களையும் உறவுகளை இழந்த குடும்பங்களையும் அமைச்சர் சந்தித்து கலந்துரையாடினார். அமைச்சரை சந்தித்து பாதிக்கப்பட்ட மக்கள் எங்களையும் காப்பாற்றுங்கள் என கதறி அழுதனர். 

இதன் போது கருத்து தெரிவித்த பிரதி அமைச்சர், 

இதேவேளை கந்தப்பளை பகுதியில் மாத்திரம் 800 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் அறியகிடைத்தது. மலையக பெருந்தோட்ட பகுதிகளில் உள்ள மக்கள் தொடர்ந்தும் இதுபோன்ற வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவில் பாதிக்கபாபட்டு வருகின்றார்கள். 

இவர்களுக்கான பாதுகாப்பான ஒரு இடத்தை பெற்றுக் கொடுப்பது தான் எமது முதற்கட்ட நடவடிக்கையாக இருக்கிறது. 

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் உத்தியோக பூர்வ அறிக்கையின் பிரகாரம் பாதுகாப்பான பகுதியில் இவர்களுக்கான வீடமைப்பு திட்டங்கள் எமது அரசாங்கத்தின் ஊடாக கட்டாயம் அமைத்து கொடுக்கப்படும். நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தினை முன்வைத்து அனர்த்த அரசியலில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். 

இறந்து கிடக்கும் உடல்கள் மேல் ஏரி அரசியல் பேசுகிறார்கள் ஜனாதிபதியால் முன்னெடுக்கப்படுகின்ற நடவடிக்கைகளுக்கு எதிர்கட்சியினர் ஒத்துழைப்பு வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு விடிவு கிடைக்க வேண்டும் என்ற என்னம் அவர்களுக்கு கிடையாது இந்த சந்தர்ப்பத்தில் இதனை வைத்து மக்களை குழப்ப முயற்சிக்கிறார்கள் என தெரிவித்தார்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title