Dec 8, 2025 - 01:26 PM -
0
வடமராட்சி கிழக்கு தொடக்கம் நெடுந்தீவு வரையான மீனவ சங்க பிரதிநிதிகள் - யாழ். மாவட்ட நீரியல்வளத் திணைக்கள பிரதிப் பணிப்பாளரை சந்தித்து (08) பேச்சு வார்த்தை ஒன்றை நடத்தினர்.
குறித்த சந்திப்பின் போது, இந்திய மீனவர்களின் எல்லை தாண்டிய மீன்பிடி யாழ். மாவட்ட மீனவர்களின் வாழ்வாதாரம் முற்றிலுமாக இழப்பு, அண்மை நாட்களாக நாகபட்டினம் - காரைக்கால் மீனவர்களின் இழுவைப்படகுகள் கரையை அண்மித்து மீன்பிடியில் ஈடுபட்டு வருவதாகவும் இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது.
இதன் போது கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதனை அரசாங்கமாக நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும் தவறின் நாங்கள் கடலில் இறங்கிப் போராட வேண்டிய நிலை ஏற்படும்.
ஆனாலும் அடையாளமாக எதிர்வரும் 12 ஆம் திகதி யாழ் மாவட்ட மீனவர்கள் ஒன்றினைந்து நீரியல்வளத் திணைக்களத்தின் முன்னிருந்து போராட்டம் ஒன்றை ஆரம்பித்து மாவட்டச் செயலகம் வரை செல்லவுள்ளோம். மாவட்டச் செயலகத்தை முடுக்கி எமது போராட்டத்தை முன்னெடுக்கவுள்ளோம் என தெரிவித்தனர்.
--

