Header Logo

மலையகம்
சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

Dec 25, 2025 - 04:53 PM -

0

சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி 30 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து

ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியின் கினிகத்தேனை, கடவல பகுதியில் சீமெந்து ஏற்றிச் சென்ற லொரி ஒன்று 30 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. 

ஹட்டனில் இருந்து திருகோணமலை நோக்கிச் சென்று கொண்டிருந்த லொரி ஒன்றே நேற்று (24) இரவு 7.00 மணியளவில் இவ்வாறு விபத்துக்குள்ளானது. 

குறித்த பகுதியில் உள்ள வளைவு ஒன்றில் திரும்புகையில், வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் வீதியை விட்டு விலகி லொரி பள்ளத்தில் வீழ்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் சாரதிக்கோ அல்லது வேறு எவருக்கோ காயங்களோ, உயிரிழப்புகளோ ஏற்படவில்லை. இருப்பினும் லொரிக்கும், அதில் கொண்டு செல்லப்பட்ட சீமெந்து மூடைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளது. 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கினிகத்தேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title