Header Logo

பல்சுவை
பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

Jan 1, 2026 - 08:45 PM -

0

பெண்ணை கூட்டு வன்​கொடுமை செய்து ஓடும் வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூரம்

ஹரி​யா​னா​வில் 25 வயதுப் பெண்ணை லிப்ட் தரு​வ​தாக அழைத்​துச் சென்​று, கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்து வேனில் இருந்து தூக்கி வீசிய கொடூர சம்​பவம் நிகழ்ந்​துள்​ளது. 

ஹரி​யா​னா​வின் பரி​தா​பாத், மெட்ரோ சவுக் பகு​தி​யில் கடந்த 28 ஆம் திகதி இரவு 25 வயது பெண் ஒரு​வர் கல்​யாண்​புரி சவுக் செல்ல காத்​திருந்​தார். 

அப்​போது மாருதி வேனில் வந்த இரு ஆண்​கள் லிப்ட் தரு​வ​தாக கூறி அப்​பெண்ணை அழைத்​துச் சென்​றுள்​ளனர். இந்​நிலை​யில் அவர்​கள் அந்​தப் பெண்ணை கூட்டு பாலியல் வன்​கொடுமை செய்​து, பிறகு ஓடும் வேனில் இருந்து வெளியே தள்​ளி​விட்​டு, தப்​பிச் சென்று விட்​டனர். 

இது தொடர்​பாக உ.பி. மற்​றும் ம.பி.யை சேர்ந்த இரு​வரை பரி​தா​பாத் பொலிஸார் பிடித்து விசா​ரித்​தனர். இரு​வரை​யும் நேற்று (31) கைது செய்​தனர். குற்​றத்​துக்கு பயன்​படுத்​தப்​பட்ட வாக​னத்​தை​யும் பறி​முதல் செய்​தனர். 

இது தொடர்​பாக பரி​தா​பாத் பொலிஸார் நேற்று கூறிய​தாவது, 

வேனில் இருந்து வெளியே வீசப்​பட்​ட​தில் படு​கா​யம் அடைந்த அந்​தப் பெண் ஒரு​வழி​யாக சமாளித்து தனது சகோ​தரியை உதவிக்கு அழைத்​துள்​ளார். இதையடுத்து சகோ​தரி அங்கு விரைந்து வந்து அப்​பெண்ணை வைத்தியசாலையில் சேர்த்​துள்​ளார். 

பிறகு சகோ​தரி​யின் புகாரின் அடிப்​படை​யில் மறு​நாள் கோட்​வாலி பொலிஸ் நிலை​யத்​தில் கூட்டு பாலியல் வன்​கொடுமை உள்​ளிட்ட பல்​வேறு குற்​றங்​கள் தொடர்​பாக வழக்​குப் பதிவு செய்​யப்​பட்​டது. 

சம்பவ நாளில் அந்​தப் பெண் தனது தோழி​யின் வீட்​டிலிருந்து திரும்​பிக் கொண்​டிருந்​தார். கல்​யாண்​புரி சவுக் செல்​வதற்கு எந்த வாக​ன​மும் கிடைக்​காத​தால் அவருக்​குத் தாமத​மாகி​விட்​டது. அவருக்கு லிப்ட் கொடுத்த இரு ஆண்​களும் கல்​யாண்​புரி சவுக் செல்​வதற்கு பதிலாக குரு​கி​ராம் சாலை​யில் சென்​றுள்​ளனர். பிறகு இந்த கொடூர குற்​றத்தை இழைத்​துள்​ளனர். இவ்​வாறு பொலிஸார் கூறினர்.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title