Header Logo

மலையகம்
வட்டவளை - நாவலப்பிட்டி இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

Jan 5, 2026 - 12:56 PM -

0

வட்டவளை - நாவலப்பிட்டி இடையிலான ரயில் சேவைகள் ஆரம்பம்

வட்டவளையில் இருந்து நாவலப்பிட்டிக்கான பயணிகள் ரயில் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது. 

நாட்டில் நிலவிய மோசமான காலநிலை காரணமாக மலையகத்தில் ரயில் பாதைகளுக்கு ஏற்பட்ட கடுமையான சேதம் காரணமாக சேவை நிறுத்தப்பட்டிருந்தது. 

தொடர்ந்து பாடசாலை முதலாம் தவணை இன்று (05) ஆரம்பமானதோடு மாணவர்கள் நலன் கருதியும் அலுவலக ஊழியர்களின் நலன் கருதியும் இன்று ரயில் சேவைகள் முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.​ 

அதன்படி, காலை 5:15 மணிக்கு வட்டவளை ரயில் நிலையத்திலிருந்து பயணத்தைத் ஆரம்பிக்கும் ரயில், காலை 6:30 மணிக்கு நாவலப்பிட்டி ரயில் நிலையத்தை வந்தடையும். 

மேலும், பிற்பகல் 2:15 மணிக்கு மீண்டும் நாவலப்பிட்டியிலிருந்து வட்டவளை ரயில் நிலையத்திற்கு சேவையை நடத்த ரயில்வே கட்டுப்பாட்டு அறை நடவடிக்கை எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

எதிர்வரும் நாட்களில் இந்த தொடருந்து ஹட்டன் ரயில் நிலையம் வரை இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி ரயில் நிலைய அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!