வடக்கு
இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

Jan 6, 2026 - 01:29 PM -

0

இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருவதாகவும் அந்தவகையில் இன்று (06) ஆமையின் இறந்த உடல் கரையொதுங்கிய உள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர். 

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05