Header Logo

பல்சுவை
உடலில் கொழுப்பு அதிகரிப்பதை உணர்த்தும் உறுப்புகள்!

Jan 24, 2026 - 01:39 PM -

0

உடலில் கொழுப்பு அதிகரிப்பதை உணர்த்தும் உறுப்புகள்!

உடலுக்கு கொழுப்பு அவசியம். ஆனால் அதன் அளவு அதிகரிப்பது ஆபத்தானது. குறிப்பாக எல்.டி.எல். எனப்படும் கெட்ட கொலஸ்ட்ராலின் அளவு 100-க்குள் இருக்க வேண்டும். அதனை தாண்டும்போது மாரடைப்பு, பக்கவாதம் உள்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படக்கூடும். 

இந்த கொழுப்பின் அளவு அதிகரிக்கும்போது சில உடல் உறுப்புகளே அறிகுறிகளை வெளிப்படுத்தி நம்மை எச்சரிக்கும். அதனை கவனத்தில் கொண்டு உடனடியாக சிகிச்சை பெற்றாலே கொழுப்பு அதிகரிப்பதை கட்டுப்படுத்திவிடலாம். கொழுப்பு அதிகரிப்பதை எந்தெந்த உறுப்புகள் எந்த மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்துகின்றன என்று பார்ப்போமா? 

கால் வலி அல்லது தசை பிடிப்பு 

உடலில் கொழுப்பு அளவு அதிகரிக்கும்போது கால்களில் வலி மற்றும் தசை பிடிப்பு ஏற்பட தொடங்கும். இதன் காரணமாக அந்த பகுதிக்கு செல்லும் ரத்த ஓட்டம் குறையும். அதன் தாக்கமாக நடக்கும்போதோ அல்லது ஓய்வெடுக்கும்போதோ கால்களில் வலி அல்லது தசை பிடிப்பு ஏற்படும். இதுபோன்ற அறிகுறிகள் வெளிப்பட்டால் அது கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடா என்பதை உறுதி செய்ய மருத்துவ பரிசோதனையோ, ஆலோசனையோ மெற்கொள்வது அவசியமானது. 

மார்பு வலி அல்லது அழுத்தம் 

மார்பு வலியையோ அல்லது அழுத்தத்தையோ உணர்வதும் கொழுப்பு அதிகரிப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். இதய தமனிகளில் கொழுப்பு குவிவது மார்பில் அழுத்தத்தை ஏற்படுத்தும். மார்பில் இறுக்கமோ, எரிச்சலோ உண்டாகக்கூடும். அத்தகைய அறிகுறிகள் மாரடைப்பு அல்லது கரோனரி தமனி நோயின் அறிகுறியாக இருக்கலாம். 

கழுத்து, தாடை அல்லது தோள்பட்டையில் வலி 

கொழுப்பு அதிகரித்தால், கழுத்தை சுற்றி வலி உண்டாகும். ஏனெனில் கொழுப்பு அதிகரிக்கும் போது, முழு உடலின் ரத்த ஓட்டமும் தடைபட தொடங்கும். இதன் காரணமாக கழுத்தைச் சுற்றி மட்டுமின்றி தாடை மற்றும் தோள்பட்டைகளில் அசாதாரண வலியை உணரலாம். 

வேறு சில அறிகுறிகள் 

கொலஸ்ட்ரால் அதிகரிக்கும் போது, கைகள் மற்றும் கால்களில் உணர்வின்மை, கூச்ச உணர்வு அல்லது குளிர்ச்சியை உணரலாம். 

உடலில் கொழுப்பு அதிகரித்திருப்பதன் காரணமாக, கால்களின் நிறம் மாறக்கூடும். சில சமயங்களில் நீல நிறத்தில் காட்சியளிக்கக்கூடும். 

தலை பாரமாக இருப்பது போன்ற உணர்வு அல்லது தலைச்சுற்றல் ஆகியவை கொழுப்பு அதிகரித்திருப்பதன் அறிகுறியாக இருக்கலாம். 

படிக்கட்டுகளில் ஏறும் போது மூச்சுத் திணறல் ஏற்படுதல் அல்லது சோர்வாக உணருதல் அதிகரித்த கொழுப்பின் வெளிப்பாடாக இருக்கலாம். 

கண்களைச் சுற்றி மஞ்சள் அல்லது மஞ்சள் வளையம் தோன்றக்கூடும். 

உடலில் இதுபோன்ற மாற்றங்களை கண்டால், உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் நிலைமை மோசமாகாமல் தடுக்க முடியும்.


MOST READ

காணொளி
வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இந்த அரசாங்கமே சுற்றுச்சூழலுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபடுகின்றது!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

இவ்வாறு செய்தால் வடக்கு, கிழக்கு அழிந்துவிடும்!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

முக்கியமான ஆதாரங்கள் வெளிக்கொண்டு வரப்பட்டுள்ளன!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

மட்டக்களப்பில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!