Header Logo

பல்சுவை
திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்!

Jan 31, 2026 - 10:45 AM -

0

திடீரென முடங்கிய விராட்டின் இன்ஸ்டா அக்கவுண்ட்!

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது இன்ஸ்டாகிராம் கணக்கை செயலிழக்கச் செய்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். மேலும், மீண்டும் வரச்சொல்லி கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர துடுப்பாட்ட விராட் கோலியின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கமானது நேற்று (30) திடீரென முடங்கியதால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உலக அளவில் பிரபலமான இன்ஸ்டாகிராம் செயலியில் அதிக பாலோயர்களைக் கொண்ட பிரபலங்களின் பட்டியலில் டாப் 10 இல் விராட் கோலியும் ஒருவர். மேலும் அதிக பாலோயர்களைக் கொண்ட விளையாட்டு வீரர் என்ற பட்டியலில் 3 ஆவது இடத்தில் கோலி உள்ளார். இவரை மொத்தமாக 27.4 கோடி ரசிகர்கள் பின்தொடர்கின்றனர். 

இந்த நிலையில் திடீரென அவரது இன்ஸ்டா பக்கம் முடங்கியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இது நடைபெற்றதா அல்லது விராட் கோலி தாமாக தனது அக்கவுண்டை நீக்கிவிட்டாரா என்ற சந்தேகம் எழுந்தது. இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அவரது மனைவி அனுஷ்காவின் சமூக வலைதளப் பதிவின் கமெண்ட்ஸ் செக்சனில் விராட் கோலியை மீண்டும் வரச் சொல்லுங்கள் என கருத்துகளை பகிரத் தொடங்கினர். 

தனது குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள ஏதுவாக லண்டனில் குடியியேறியுள்ள கோலி கிரிக்கெட் போட்டி இருக்கக்கூடிய நாட்களில் மட்டும் இந்தியாவுக்கு வந்து செல்கிறார். ஆரம்ப காலத்தில் சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்த கோலி கொஞ்சம் கொஞ்சமாக தனது தனிப்பட்ட தகவல்களைப் பகிர்வதை நிறுத்திக் கொண்டார். தற்போது அவர் வணிக ரீதியிலான கருத்துகளை மட்டுமே பகிர்ந்து வருகிறார். இதனிடையே திடீரென முடங்கிய கோலியின் கணக்கு சிறிது நேரம் கழித்து மீண்டும் செயல்படத் தொடங்கியதால் ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர்.


MOST READ

காணொளி
மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

மூன்றாம் கட்ட அகழ்வு பணியின் 15 ஆம் நாள் அகழ்வு பணிகள்

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

இந்திய தூதுவர் சந்தோஷ் ஜா நேரில் பார்வையிட்டு ஆய்வு!

விஜயம்!

விஜயம்!

செம்மணியில் இன்று...

செம்மணியில் இன்று...

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

மன்னார் மற்றும் மருதமுனையில் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

ஹஜ்ஜுப் பெருநாள் விசேட தொழுகை!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அமைச்சர் மீது கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு!

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

அரசாங்கத்தின் மீதே ஜனாதிபதிக்கு நம்பிக்கை இருக்கிறதா?

title