மலையகம்
தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

Feb 4, 2026 - 11:17 AM -

0

தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் ஒன்றிணைய வேண்டும்!

நழிவடைந்துள்ள சகல துறைகளும் கட்டியெழுப்பப்பட்டு, பொருளாதார ஸ்திரமிக்க நாடாக எமது நாட்டை உயர்த்த வேண்டியது இந்நாட்டின் ஒவ்வொரு பிரஜையினதும் கடமை என்பதை இந்நாளில் நினைவூட்டிப் பார்ப்பதே சிறந்தது என இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் தனது 78 ஆவது சுதந்திர தின வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் குறிப்பிட்டுள்ளதாவது, 

இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கான கரங்களைப் பலப்படுத்தி, நாட்டை சுபீட்சமானதும் வளமிக்கதுமான நாடாக மாற்றியமைக்க வேண்டும் என்பதே அனைவரினதும் குறிக்கோளாக அமைய வேண்டும். 

ஒன்றுபட்ட தன்மையும், ஜனநாயகமும் நமது நாட்டின் அடையாளங்கள். இந்த சுதந்திர தினத்தில், சமத்துவம், சமூக நீதி மற்றும் மக்களின் முன்னேற்றம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு, ஒரு வலுவான தேசத்தை கட்டியெழுப்ப அனைவரும் உறுதி ஏற்போம். 

நாடு வளமுடன், மக்கள் நலனுடன், அமைதியும் ஒற்றுமையும் நிலவிட இந்த சுதந்திர தினம் நமக்கு புதிய நம்பிக்கையையும் உற்சாகத்தையும் அளிக்கட்டும். 

இலங்கையின் 78 ஆவது ஆண்டு சுதந்திரக் காற்றை சுவாசிக்கும் எனது மக்களுக்கு, சுதந்திரதின நல்வாழ்த்துகளைக் கூறிக்கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன் என தெரிவித்துள்ளார்.

Comments
0

MOST READ
01
02
03
04
05