Feb 4, 2026 - 12:28 PM -
0
முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம் அலகரை பகுதியில் நேற்று (3) மின்சாரம் தாக்கி சிறுவன் ஒருவர் உயிரிழந்தார்.
ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் புளியங்குளம் அலகரை கிராமத்தை சேர்ந்த 5 வயதான சிறுவன் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இவ் விடயம் மேலும் தெரியவருவதாவது,
யானைக்களுக்காக அமைக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார வேலியில் குறித்த சிறுவன் சிக்கியமையினால் இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பிரேத பரிசோதனைகளுக்காக சடலம் ஒட்டுசுட்டான் வைத்தியசாலையில் இருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
--

