Header Logo

மலையகம்
நுவரெலியாவில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

Feb 4, 2026 - 03:33 PM -

0

நுவரெலியாவில் 78 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள்!

நுவரெலியா மாவட்ட செயலகம் , நுவரெலியா பிரதேச செயலகம் மற்றும் நுவரெலியா மாநகசபை ஏற்பாட்டில் இன்று (04) நுவரெலியா - பதுளை பிரதான வீதி உள்ள நுவரெலியா மத்திய சந்தைக்கு முன்பாக பிரமாண்டமாக அனுஷ்டிக்கப்பட்டது. 

இம்முறை தேசிய சுதந்திர தின கொண்டாட்டம் "இலங்கையைக் கட்டியெழுப்புவோம்" என்ற கருப்பொருளின் கீழ் நடைபெற்றது. 

இதன் தொடக்க விழா 26 பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களின் பேண்ட் வாத்திய அணிவகுப்பு குழுவினரின் இசை வாத்தியங்கள் முழங்க இவ்விழா அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது. 

தொடர்ந்து பாடசாலை மாணவ, மாணவியர்கள் தேசிய கீதத்தை இசைத்தலுடன் தேசியக் கொடியினை நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி ஆகியோர் ஏற்றிவைத்தனர். 

அதனைத் தொடர்ந்து தேசத்தின் ஒருமைப்பாட்டைக் காக்கும் உன்னத நோக்கத்திற்காக உயிர்நீத்த அனைத்து தேசபக்தர்கள் போர்வீரர்களை மற்றும் நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. 

தொடர்ந்து பாடசாலை மாணவர்கள், அரசு மற்றும் தனியார் துறையினரின் பங்கேற்புடன் பல கலாச்சார நடன மற்றும் இசை நிகழ்ச்சிகளால் வண்ணமயமாக இருந்தது. 

குறித்த நிகழ்வில் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் துஷாரி தென்னகோன் மற்றும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி , நாடாளுமன்ற உறுப்பினரும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன , நுவரெலியா மாநகரசபை முதல்வர் உபாலி வனிகசேகர முப்படைகளின் கட்டளை தளபதிகள், பதவிநிலை அதிகாரிகள், மாவட்ட செயலக உத்தியோகத்தர்கள், பாடசாலை மாணவர்கள், ஊடகவியாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!