Feb 4, 2026 - 03:21 PM -
0
யாழ்ப்பாணம் - சாவகச்சேரி தனங்கிளப்பு பகுதியில் வசிக்கும் ஒருவரது காணிக்குள் இருந்து சில வெடிபொருட்கள் நேற்று (3) மீட்கப்பட்டுள்ளன.
குறித்த காணியில் துப்பரவு பணியில் ஈடுபட்டபோது இந்த வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.
ஒரு மோட்டார் குண்டு, ரி56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் ஒரு கைக்குண்டு என்பன மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றன.
சம்பவம் தொடர்பில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டது.
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்தின் அனுமதியுடன் விசேட அதிரடிப் படையினர் மூலம் குறித்த வெடிபொருட்களை அங்கிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
--

