Feb 4, 2026 - 04:36 PM -
0
78 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் மிகச் சிறப்பாக நடைபெற்றன. ஐக்கிய இளைஞர் இயக்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது. மும்மதத் தலைவர்கள் மற்றும் மூவின மக்களும் ஒன்றாக இணைந்து, தேசியக் கொடியினை ஏந்தியவாறு யாழ்ப்பாணம் பண்ணைப் பகுதியிலிருந்து நடைபவனாகவும், வாகனப் பேரணியாகவும் இக்கொண்டாட்டத்தைப் பெருமையுடன் முன்னெடுத்தனர்.
இளைஞர்களின் மோட்டார் சைக்கிள் பேரணி மற்றும் அலங்கரிக்கப்பட்ட முச்சக்கர வண்டிகளின் அணிவகுப்பு இப்பேரணிக்கு மேலும் மெருகூட்டியது. சிறுவர்களும் கைகளில் தேசியக் கொடியை ஏந்தியபடி மிகுந்த உற்சாகத்துடன் இதில் பங்கேற்றனர்.
காலை 10:00 மணிக்கு யாழ்ப்பாணம் பண்ணை சுற்றுவட்டத்தில் இருந்து ஆரம்பமான இந்தப் பேரணி, பண்ணை வீதியூடாக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய வீதியை வந்தடைந்து, பின்னர் யாழ்ப்பாணம் பொது நூலகத்தை அடைந்து நிறைவு பெற்றது.
--

