Header Logo

மலையகம்
பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

Feb 5, 2026 - 07:27 PM -

0

பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணியாற்றும் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று (05) காலை 7.30 மணி முதல் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களை உடனடியாக மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

"தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதன் காரணமாகவே, தங்களின் சேவை தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

நுவரெலியா வசந்தகாலக் கொண்டாட்டம்!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

title