Header Logo

மலையகம்
பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

Feb 5, 2026 - 07:27 PM -

0

பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணியாற்றும் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று (05) காலை 7.30 மணி முதல் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களை உடனடியாக மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

"தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதன் காரணமாகவே, தங்களின் சேவை தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

--

Comments
0

MOST READ

காணொளி
காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

காத்தான்குடி கடற்கரையில் மர்மப்பொருள்!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

70 அடி பள்ளத்தில் பாய்ந்த முச்சக்கர வண்டி!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

செம்மணி புதைகுழியில் தேங்கியுள்ள நீரை அகற்ற தீர்மானம்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

குழம்பிய குட்டைக்குள் மீன்பிடிக்க சிலர் முயற்சி செய்கிறார்கள்!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

பெருந்தோட்ட கம்பனிகளுடன் எந்த நிபந்தனையும் விதிக்கவில்லை!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றோம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

சமூக வலுவூட்டல் அமைச்சின் 'சமூகசக்தி' திட்டம்!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலையேற்றத்தால் மக்கள் அதிருப்தி!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

எரிபொருள் விலை அதிகரிப்பு என்பது தற்காலிகமானது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

ஆலய சிலையைச் சேதப்படுத்திய நபர் பொலிஸாரால் கைது!

title