Header Logo

மலையகம்
பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

Feb 5, 2026 - 07:27 PM -

0

பணி நீக்கப்பட்ட 8 பேரையும் மீண்டும் இணைக்கக் கோரி போராட்டம்!

ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணியாற்றும் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று (05) காலை 7.30 மணி முதல் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

தங்களை உடனடியாக மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். 

கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில், 

"தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதன் காரணமாகவே, தங்களின் சேவை தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!