Feb 5, 2026 - 07:27 PM -
0
ஹொரண பெருந்தோட்ட நிறுவனத்திற்கு உட்பட்ட சாமிமலை, கவரவில தோட்டத்தில் பணியாற்றும் எட்டு தொழிலாளர்களின் சேவையை தோட்ட நிர்வாகம் இடைநிறுத்தியமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் இன்று (05) காலை 7.30 மணி முதல் தோட்டத்தில் அமைந்துள்ள இந்து ஆலயத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தங்களை உடனடியாக மீண்டும் பணியில் இணைக்க வேண்டும் என்றும், பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலத்திற்கான நிலுவைச் சம்பளத்தை வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தியே அவர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 48 நாட்களாகத் தங்களின் சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும், தோட்ட நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து முரண்பாடே இதற்குக் காரணம் என்றும் போராட்டத்தில் ஈடுபட்ட தொழிலாளர்கள் தெரிவித்தனர்.
இது குறித்து அவர்கள் மேலும் தெரிவிக்கையில்,
"தோட்டத்தில் பதிவு செய்யப்படாத வெளியாட்களைப் பயன்படுத்தி தேயிலை பறிக்கும் பணியை மேற்கொள்ள தோட்ட நிர்வாகம் எடுத்த தீர்மானத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தோம். இதன் காரணமாகவே, தங்களின் சேவை தன்னிச்சையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது" என தெரிவித்தனர்.
--

