மலையகம்
ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

Feb 10, 2026 - 01:36 PM -

0

ஹட்டனில் சிறுத்தை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சித்திரவத்தை தோட்டப் பகுதியில், இன்று (10) காலை நீராடுவதற்காகக் கால்வாய் பகுதிக்குச் சென்ற இளைஞர் குழுவினர், வீதியோரத்தில் சிறுத்தை ஒன்று கிடப்பதைக் கண்டுள்ளனர். 

இது குறித்து உடனடியாக ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், பின்னர் நல்லதன்னி வனவிலங்கு அலுவலக அதிகாரிகளுக்கும் அறிவிக்கப்பட்டது. 

குறித்த சிறுத்தை உயிரிழந்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. மக்கள் நடமாடும் பாதையிலேயே இந்த விலங்கு உயிரிழந்து கிடந்தாலும், அதன் உடலில் காயங்கள் அல்லது பாதிப்புகள் குறித்த தெளிவான தகவல்கள் இல்லை என வனவிலங்கு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

சிறுத்தையின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்படவுள்ளது.

--

Comments
0

MOST READ
01
02
03
04
05