Feb 10, 2026 - 06:17 PM -
0
இலங்கை வரலாற்றில் மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலச் சம்பளப் பிரச்சினைக்கு, 09 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் முறையான தீர்வைப் பெற்றுக்கொடுத்துள்ளதாகப் பெருந்தோட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
தமது நாளார்ந்த சம்பளத்தை 1,750 ரூபாயாக உயர்த்தி வழங்கிய ஜனாதிபதிக்கும் அரசாங்கத்திற்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்வு இன்று (10) மாலை பொகவந்தலாவ, கெர்க்கஸ்வோல்ட் கீழ்பிரிவு தோட்டத்தில் நடைபெற்றது.
மடுல்சீமை பெருந்தோட்ட நிறுவனத்தின் கீழ் இயங்கும் இத்தோட்டத்தின் தொழிலாளர்கள், பாற்சோறு சமைத்தும், கேக் வெட்டியும் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இதன்போது ஜனாதிபதிக்கும் தற்போதைய அரசாங்கத்திற்கும் அவர்கள் தமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
--

