Header Logo

பல்சுவை
பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி!

Feb 12, 2026 - 04:09 PM -

0

பாடசாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி!

தாய்லாந்தின் சோங்க்லா மாகாணத்தில் உள்ள ஒரு பாடசாலையில் 18 வயது இளைஞர் ஒருவர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 34 பேர் கொல்லப்பட்டனர். அந்த நபரின் சகோதரி அதே பாடசாலையில் படித்து வந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 

துப்பாக்கி ஏந்திய அந்த நபர், சில நாட்களுக்கு முன்பு தனது சகோதரியைக் கண்டித்த ஆசிரியரைத் தேடிக்கொண்டு இருந்தார். சம்பவம் குறித்து பொலிஸார் தற்போது விசாரணை நடத்தி வருகின்றனர். பாடசாலைக்கு சீல் வைக்கப்பட்டு, முழுப் பகுதியிலும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

துப்பாக்கிச் சூட்டுக்குப் பிறகு, தாக்குதல் நடத்தியவர் பல மாணவர்கள், ஆசிரியர்களை பணயக்கைதிகளாகப் பிடித்தார். இன்னும் பல மாணவர்கள் பாடசாலைக்குள் சிக்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவ இடத்தில் இருந்து தப்பிய ஒரு பாதுகாப்பு காவலர், தாக்குதல் நடத்தியவர் பாடசாலை அதிபரையும் சுட்டுக் கொன்றதாகத் தெரிவித்தார். 

சிறப்புப் படைகள், மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளன. தாக்குதல் நடத்திய நபருடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சிகள் நடந்து வருகின்றன. அவரது அடையாளம் தெரியவில்லை. பொலிஸார் முழுப் பகுதியையும் சுற்றி வளைத்து நிலைமையைக் கட்டுப்படுத்த முயற்சித்து வருகின்றனர். காயமடைந்தவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். 

தாக்குதலுக்கு முன்பு, பாடசாலைக்கு அருகிலுள்ள ஒரு வீட்டில் துப்பாக்கி ஏந்திய ஒருவர் இருப்பதாகவும், அவரது தாயாருக்கு தீங்கு விளைவிப்பதாக அச்சுறுத்துவதாகவும் பொலிஸாருக்கு தகவல் கிடைத்தது. துப்பாக்கிச் சூட்டின் போது நூற்றுக்கணக்கான மாணவர்கள் பாடசாலையை விட்டு ஓடிக்கொண்டிருந்தனர். தாக்குதல் நடத்தியவர் எத்தனை மாணவர்கள், ஆசிரியர்களை பிணைக் கைதிகளாகப் பிடித்தார் என்பது தெரியவில்லை என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Comments
0

MOST READ

காணொளி
தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

தமிழ் அரசியல் தரப்பினர் சரியாக பயன்படுத்தவில்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இலங்கையில் மலேரியா இல்லை!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

இறங்குதுறைப் புனரமைப்புப் பணி ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு!

டிக்கோயாவில் தொடர்மழையால்  வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

டிக்கோயாவில் தொடர்மழையால் வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

வீட்டிற்கு வீடு கட்சிகள் அதிகரித்து விட்டது!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

நீதியை நிலைநாட்டுவதற்கு எங்களுடைய பங்களிப்பு இருக்கும்!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளுக்காக நீதிமன்றினால் அனுமதி!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

இப்போதுதான் நீதி குறித்த நம்பிக்கை பிறந்துள்ளது!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பில் ஈஸ்டர் தாக்குதலின் 7 ஆம் ஆண்டு நினைவேந்தல்!

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

நிந்தவூர் நாற்சந்தியில் விபத்து

title