Feb 13, 2026 - 03:53 PM -
0
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடொன்றில் சுமார் 9 லட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான தங்க நகைகளைத் திருடிச் சென்ற நபர் ஒருவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
ஹட்டன் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி சுகததாசவுக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது அவரால் திருடப்பட்ட 9 இலட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபா பெறுமதியான தங்க நகைகளும் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யூலிபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தியபோது, அவர் நகையைத் திருடிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து, அவரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுவிக்க நீதவான் உத்தரவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

