Feb 15, 2026 - 07:14 PM -
0
மின்சக்தித் துறை தொடர்பான பிரச்சினைகள் குறித்த ஒத்திவைப்பு வேளை விவாதம் எதிர்வரும் 20ஆம் திகதி நடைபெறவுள்ளது.
அதற்கமைய, எதிர்க்கட்சியினால் முன்வைக்கப்படும் இந்த யோசனை அன்றைய தினம் முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 5.30 மணி வரை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.
நிலக்கரி இறக்குமதியின் போது ஊழல் மற்றும் முறைகேடுகள் இடம்பெற்றுள்ளதாக அரசியல் மேடைகளில் பேசப்பட்டு வரும் பின்னணியில் இந்த விவாதம் நடைபெறுவது விசேட அம்சமாகும்.
இதேவேளை, 2026ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சாரக் கட்டணத்தை 13.56 சதவீதத்தால் அதிகரிப்பதற்கான யோசனையை இலங்கை மின்சார சபை நேற்று (14) பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.
இந்த விவாதத்தின் போது இது தொடர்பில் ஆளுந்தரப்பு மற்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கவனம் செலுத்தப்படும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

