Feb 17, 2026 - 09:56 AM -
0
நாடளாவிய ரீதியில் இன்று (17) ஆரம்பமாகியுள்ள க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு, மன்னாரில் பாடசாலை மாணவர்கள் இறையாசி பெற்று ஆர்வத்துடன் பரீட்சை மண்டபத்திற்குச் செல்வதைக் காண முடிந்தது.
2025 (2026) ஆம் ஆண்டிற்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை நாடு முழுவதும் 3,545 மத்திய நிலையங்களில் இன்று முதல் ஆரம்பமாவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே குறிப்பிட்டுள்ளார்.
3,545 பரீட்சை மத்திய நிலையங்களில் 451,463 பரீட்சார்த்திகள் இம்முறை பரீட்சைக்குத் தோற்றவுள்ளதாகப் பரீட்சை திணைக்களம் தெரிவித்துள்ளது.
மன்னாரில் 32 பரீட்சை நிலையங்களில் 3,224 பரீட்சாத்திகள் க.பொ.த சாதாரண பரீட்சைக்கு தோற்றவுள்ளனர்.
--

