Header Logo

மலையகம்
84 நாட்களாக முடங்கியுள்ள ஹட்டன் ரயில் நிலையம்!

Feb 19, 2026 - 08:32 PM -

0

84 நாட்களாக முடங்கியுள்ள ஹட்டன் ரயில் நிலையம்!

டித்வா புயல் காரணமாக மலையகத்திற்கான புகையிரத சேவைகள் பாரிய அளவில் பாதிக்கப்பட்டன. 

இதனால் ஹட்டன் புகையிரத நிலையம் கடந்த 84 நாட்களாக ஆள் நடமாற்றமின்றி வெறிச்சோடி காணப்படுகின்றது. 

இந்த புகையிரத நிலையத்திற்கு நாளாந்தம் உள்நாட்டு வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட அன்றாடம் புகையிரதத்தினை பயன்படுத்தும் ஆயிரம் கணக்கானோர் வருவது வழமை. 

ஹட்டன் ஊடாக கடந்த காலங்களில் நாளொன்றுக்கு 14 புகையிரத சேவைகள் இடம்பெற்றதாகவும் அந்த சேவைகள் இடம்பெறாமையினால் பெருந்தோட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்களும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலா பயணிகளும் பாரியளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. 

சிவனொளிபாதமலை பருவ காலம் தற்போது ஆரம்பித்துள்ள நிலையில் அதிக யாத்திரியர்கள் புகையிரதங்கள் ஊடாக வருவதனால் யாத்திரியர்களின் வருகையும் குறைந்துள்ளது. 

இதனால் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு நாளொன்றுக்கு சுமார் 3 தொடக்கம் 4 லட்சம் ரூபாய் வரை நட்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த காலப்பகுதியில் ஹட்டன் புகையிரத நிலையத்திற்கு மாத்திரம் சுமார் 300 லட்சம் ரூபாவுக்கும் அதிக நட்டம் ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

மலையக புகையிரத சேவைகள் முடங்கியுள்ளதனால் பொருட்கள் பறிமாற்ற நடவடிக்கைக்கும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

இதனால் வர்த்தகர்கள் பெரும் நட்டத்தினை அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

நாவலபிட்டி முதல் வட்டவளை வரை புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை கொட்டகலை வரை நீடிப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரியுள்ளனர்.

 

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!