Header Logo

மலையகம்
வட்டவளையில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி!

Feb 21, 2026 - 11:25 AM -

0

வட்டவளையில் 15 அடி பள்ளத்தில் வீழ்ந்த லொறி!

ஹட்டனில் இருந்து கொழும்பு நோக்கிச் சென்ற சரக்கு லொறி ஒன்று இன்று (21) அதிகாலை 2.30 மணியளவில் வட்டவளைப் பகுதியில் சுமார் 15 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது. எதிரே வந்த வாகனத்திற்கு இடமளிக்க முயன்றபோது, லொறியின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார். 

இந்த விபத்தில் லொறி கடுமையாகச் சேதமடைந்ததுடன், அதன் ஓட்டுநர் வாகனத்தினுள்ளேயே சிக்கிக்கொண்டார். அவரை மீட்பதற்காக வட்டவளை பொலிஸாரும், பிரதேச மக்களும் இணைந்து சுமார் ஒன்றரை மணிநேரம் கடும் முயற்சியில் ஈடுபட்டனர். விபத்து நடந்த சமயம் லொறியில் ஓட்டுநரும் அவரது உதவியாளரும் மட்டுமே இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. 

மீட்கப்பட்ட ஓட்டுநர் 1990 'சுவசெரிய' அவசர சிகிச்சை ஆம்புலன்ஸ் மூலம் வட்டவளை பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இச்சம்பவம் குறித்து வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

--


MOST READ

காணொளி
உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

உதயன் கம்மன்பிலவை கைது செய்ய வேண்டும்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

பொய்யான வதந்திகளை பரப்பி மக்களை அணி திரட்டினர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

குற்றச்சாட்டுக்களை நிராகரித்தார் அமைச்சர்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கையை தடுப்போம்!

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

வடமாகாண ஆளுநர் கைக்கூலியாக செயற்படுகிறார்

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

கடல்வழியாகப் போதைப்பொருட்களைக் கடத்திக்கொண்டுதான் இருக்கிறார்கள்!

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க  துடிக்கிறது - கோடிஸ்வரன்

மாகாண அதிகாரங்களை தற்போதைய அரசும் பறிக்க துடிக்கிறது - கோடிஸ்வரன்

நான் செய்த குற்றம் என்ன?

நான் செய்த குற்றம் என்ன?

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

செம்மணி அகழ்வுப் பணிகள் தொடர்பில் எந்தச் சந்தேகமும் இல்லை!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!

ஓர் இன அழிப்பிற்கான செயற்பாடு இடம்பெற்றுள்ளது!