Feb 23, 2026 - 02:00 PM -
0
டயகம நட்போன் தோட்டப்பகுதியில் முச்சக்கரவண்டி ஒன்று 200 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம நகரத்தில் இருந்து வெஸ்ட் டயகம நட்போன் தோட்டத்திற்கு செல்லும் பிரதான பாதையிலே நேற்று (22) இரவு 09 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
முச்சக்கர வண்டி சாரதியும், அதில் பயணித்த மூவர் உட்பட நால்வர் டயகம பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
மேலதிக விசாரணைகளை டயகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
--

