Header Logo

பல்சுவை
பாடசாலைகளுக்கு அருகே இறைச்சி விற்பனைக்கு தடை

Feb 24, 2026 - 10:39 AM -

0

பாடசாலைகளுக்கு அருகே இறைச்சி விற்பனைக்கு தடை

இந்தியாவின் பீகாரில் பாடசாலைகள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கு அருகில் இறைச்சி மற்றும் மீன் விற்பனை செய்வதற்கு விரைவில் தடை விதிக்கப்படும் என்று பீகார் துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா அறிவித்துள்ளார். 

நேற்று (23) செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், கடந்த 21 ஆம் திகதி நடைபெற்ற நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித் துறை கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. 

சிறுவர்களிடையே வன்முறைப் குணம் உருவாவதைத் தடுப்பது, பொதுமக்களின் புனிதமான உணர்வுகள் மற்றும் மத நம்பிக்கைகள் புண்படாமல் பாதுகாப்பது, சுகாதாரமற்ற முறையில் திறந்தவெளியில் விற்கப்படும் உணவுகளால் ஏற்படும் உடல்நலக் கேடுகளை தவிர்ப்பது, பொது இடங்களில் தூய்மையைப் பராமரித்தல் ஆகிய காரணங்களுக்காக இந்த முடிவு எடுக்கப்பட்டதாக விஜய் குமார் சின்ஹா தெரிவித்தார். 

மேலும், மக்களின் உணவு விருப்பங்களுக்கு அரசு எதிரானது அல்ல என்று குறிப்பிட்ட விஜய் குமார் சின்ஹா, பொதுமக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும், சமூக கண்ணியத்தைப் பாதுகாக்கவும், சுற்றுச்சூழலைத் தூய்மையாக வைத்திருக்கவும் இத்தகைய கடுமையான நடவடிக்கைகள் அவசியம் என்றும் கூறினார். 

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அபராதம் மற்றும் பொருட்களைப் பறிமுதல் செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் பீகார் அரசு தரப்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது. 

மேலும் மற்ற இடங்களில், இறைச்சிக் கடைகள் பொதுமக்களின் பார்வையில் நேரடியாகப் படாதவாறு திரைகள் அல்லது கண்ணாடி பேனல்கள் மூலம் மறைக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.

Comments
0

MOST READ

காணொளி
ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

ஹேவாஹெட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய வருடாந்தத் தேர்த் திருவிழா!

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நாங்கள் மக்களுடன் நெருக்கமாக இருக்க வேண்டும்

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

நிரந்தரமான அரசியல் தீர்வொன்றை அடைய வேண்டும்!

வெறிச்சோடிய கொழும்பு!

வெறிச்சோடிய கொழும்பு!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

தமிழ், சிங்கள புத்தாண்டு விசேட வழிபாடுகள்!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நடந்து இருக்கும் ஊழலை நீங்கள் மறைக்க முடியாது!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

நரியின் ஊளையை கண்டு சிங்கங்கள் அஞ்சுவதில்லை!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

வட மாகாணத்தில் இழுவை படகுகளிடம் கப்பம் வாங்குகிறார்கள்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்க வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

முஸ்லிம் மக்களின் உணர்வுகளை மதித்து செயற்பட வேண்டும்!

title